• June 4, 2025

கோவில்பட்டி புத்தக கண்காட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

 கோவில்பட்டி புத்தக கண்காட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் கடந்த 21ந்தேதி புத்தக் கண்காட்சி தொடங்கியது.. ஜூன் 9ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது.

புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் பொது மக்களுக்கு திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முகமது பைசல்  தலைமையிலான மருத்துவ குழுவினர்  இன்று கண் பரிசோதனை செய்தனர்.

முகாமிற்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார்.

இலவச கண் பரிசோதனை முகாமினை நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்துமேரி தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகியான  அமலி டிராவல்ஸ் உரிமையாளர் பிரகாஷ், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, ஆவுடையப்பன், காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்பரிசோதனை செய்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *