பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி முத்தையாமால் தெருவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மதிமுத்து,சேகர், கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மகேந்நிரன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்.நற்பணி இயக்கத்தை சேர்ந்த முத்துசாமி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
