வாஞ்சி மணியாச்சியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி எம் சி.சண்முகையா எம்.எல்.ஏ. மனு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களைச் சார்ந்த வியாபாரிகள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருந்த ரெயில்கள் அனைத்தும் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதை தென்னக ரெயில்வே நிறுத்திவிட்டது..
இதனால் சுமார் 75 கிராமங்களை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னர் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் நின்று சென்ற ரெரயில்கள் அனைத்தும் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக நின்று செல்ல வழிவகை செய்யுமாறு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த ரெயில்களும் நிற்கவில்லை.
இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா , சென்னையில் ரெயில்வே தென்மண்டல உதவி மேலாளர் கவுசில் கிஷோரை நேரில் சந்தித்து மனு அளித்தார்
. 19-8-2024 அன்று ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி (06668-06667) திருநெல்வேலி பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு களத்திற்கு முன்னர் நின்று சென்ற ரெயில்கள் அனைத்தும் மீண்டும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது..
இந்த நிலையில் வாஞ்சி மணியாச்சியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லாவிட்டால் 6-9-2024 அன்று காலை 10 மணி அளவில் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமையில் சுமார் 75 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்..
