மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன . இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ரெயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
