• June 4, 2025

கடலூரில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

 கடலூரில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

கடலூர் ஆலை காலனி பகுதியில் வசித்து வந்தவர்  புஷ்பநாதன் (வயது 46). இவர் அதிமுக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

இன்று காலை  இவர் வட்டிபாளையம் முருகன்கோவில் பகுதியில் இருந்தார். அச்சமயம் அங்கு வந்த சிலர்  புஷ்பநாதனை சுற்றிவளைத்தது,  திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

புஷ்பநாதன் நிலைமையை உணர்ந்து தப்பிச்செல்ல முயன்றும் பலனில்லை. புஷ்பநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த புஷ்பநாதன்  இறந்து போனார்.

இதை தொடர்ந்து  மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அரசியல் காரணத்திற்காக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *