255 வது பிறந்த நாள்: சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் சிலைக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 255 வது பிறந்த நாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் .ச.அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்ர
வைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன் மற்றும் வீரன் வெள்ளையத்தேவன் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்,
மாலை அணிவிப்பு நிகழச்சி முடிந்ததும் வெள்ளையத்தேவன் வாரிசுதாரரான சி.ஆறுமுகம், ஏ.மாரிமுத்து ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி அஜய் சீனிவாசன் கவுரவித்தார்.
