ஆசிய யோகா போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற கோவில்பட்டி கணேஷ் மூர்த்திக்கு கடம்பூர் ராஜூ பாராட்டு

தாய்லாந்தில் பாங்காக் நகரில் 3-வது பசுபிக் ஆசிய யோகா போட்டி நடைபெற்றது .இப்போட்டியில் தாய்லாந்து, இந்தியா,இலங்கை , நேபாளம்,பூடான், தென் ஆப்பிரிக்கா, பர்மா மங்கோலியா ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன
இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி என்பவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில் யோகா போட்டியில் கலந்து கொண்டு 3-வது பரிசாக வெண்கல பதக்கம் வென்றார்.
கோவில்பட்டிக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெண்கலப் பதக்கம் பெற்ற கணேஷ்மூர்த்தியை முன்னாள்அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அப்போது தமிழ்நாடு யோகாசங்கத்தின் செயலாளர் மாரியப்பன்,அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன்,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகைபாலன்,மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் போடுசாமி,கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
