அகில இந்திய ஆக்கி: போபால்,புபனேஸ்வர், நியூடெல்லி, பெங்களுரு அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
போட்டியின் ஏழாம் நாளான இன்று (புதன்கிழமை) அன்று காலை 7 மணியளவில் முதல் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் சென்னை, இந்தியன் பேங்க் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணி வீரர் சுனித் லக்ரா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
14-வது நிமிடத்தில் சென்னை, இந்தியன் பேங்க் அணி வீரர் ஸ்டாலின் அபிலாஷ் பீல்டு கோல் முறையில் பதிலுக்கு ஒரு கோல் போட்டார்.

22 மற்றும் 23-வது நிமிடங்களில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் அமந்தீப் லக்ரா பெனால்டி கார்னர் முறையில் இரு கோல்கள் போட்டார். இதனால் அவர்கள் முன்னணி பெற்றனர்.
29-வது நிமிடத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் பிரதான் பூவண்ணா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்,
தொடர்ந்து இந்தியன் பேங்க் அணி வீரர்கள் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 4:1 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
அஸ்வனி குமார் ,சுரேஷ் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் அமந்தீப் லக்ராவுக்கு வழங்கப்பட்டது.
புபனேஸ்வர்
மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற காலிறுதி போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மோதின.
3-வது மற்றும் 27 வது நிமிடத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் பட்ராஸ் திற்கேய் பெனால்டி கார்னர் முறையில் அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டார்.
32-வது நிமிடத்தில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணி வீரர் மகேந்திரன் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
34-வது நிமிடத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் பால்ஸ் லக்ரா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

47-வது நிமிடத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் டப்புகா புர்த்தி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
48-வது நிமிடத்தில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணி வீரர் கார்த்தி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
53-வது நிமிடத்தில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணி வீரர் கோவில்பட்டி மாரீஸ்வரன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
இறுதியில் 4:3 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பிரியாஸ் கவுடா,சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் பிஜு எக்கா-வுக்கு வழங்கப்பட்டது.
நியூடெல்லி
மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் களம் கண்டன
ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் முருகேஷ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
14-வது நிமிடத்தில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் முரளி கிருஷ்ணன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

37-வது நிமிடத்தில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் தல்விந்தர் சிங் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
42-வது நிமிடத்தில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் குர்ஜிந்தர் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
47-வது நிமிடத்தில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் விக்ரம்ஜித் சிங் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
49-வது நிமிடத்தில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வீரர் தல்விந்தர் சிங் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
ஆரம்பத்தில் 2 கோல்கள் போட்டு அதிரடி காட்டிய கோவில்பட்டி அணியினருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
2 கோல்கள் வாங்கிய நியூடெல்லி அணி வீரர்கள் ஆவேசத்தை காட்தொடங்கினர். கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் அவற்றை கோல்களாக மாற்றினார்கள். இதனால் அவர்கள் வெற்றிக்கனியை பறித்தனர்.
ஆட்ட இறுதியில் 4:2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
சுரேஷ் குமார்,முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வீரர் திவாகருக்கு வழங்கப்பட்டது.
பெங்களுரு
இரவு 8.30 மணிக்கு நான்காவது காலிறுதி போட்டி நடந்தது. பெங்களூரு, கனரா பேங்க் அணியும் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் சந்தித்தன.
ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் பரத் மஹாலிங்கப்பா பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். அதன்பிறகு யாரும் அடுத்த கோல் போடவில்லை.

அந்த அளவுக்கு போட்டி கடுமையாக இருந்தது. தங்கள் திறமையை வெளிப்படுத்தி விளையாடினர். இறுதியில் 1:0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பாலாஜி குமார்,அஸ்வனி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் பிருதிவி ராஜுக்கு வழங்கப்பட்டது.
அரையிறுதி போட்டி
1.6.2024 சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி போட்டிகளின் விவரம்:
மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.
மாலை 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு கனரா பேங்க் அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன.
