• May 15, 2024

கோவில்பட்டி கம்பன் கழக 32-ம் மாதகூட்டம்

 கோவில்பட்டி கம்பன் கழக 32-ம் மாதகூட்டம்

கோவில்பட்டிக் கம்பன் கழகத்தின் 32-ம் மாதக் கூட்டம் மந்தித்தோப்பு சாலை பகுதியில் அமைந்துள்ள புனிதஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கம்பம் கழக துணைத் தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்தது.

கோவில்பட்டிக் கம்பன் கழக நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி,  கோவில்பட்டி ரீ-பிட் இயன்முறை சிகிச்சை மையம் பிஸியோதெரபி சிறப்பு நிபுணர் செல்வின் ஜூலியஸ்,கடம்பூர் தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலாளர் சரவணச் செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

மாணவர் உரை நிகழ்வில் முதலில் மதுரை கல்லூரி மாணவர் செல்வன் அரவிந்த பிரகாஷ் கலந்து கொண்டு “கம்பனில் கந்தன்” என்ற பொருளின் முருக கடவுளின் பெருமைகளை பட்டியல் இட்டு அரங்கம் அதிர பேசினார். தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு  நிகழ்வில் மதுரை பேராசிரியர் செந்தூரன் கலந்து கொண்டு, கருத்து செறிவுடன், தேவையான பாடல்களை பாடி மகிழ்ந்து “கம்பனை நேசிப்போம் “ என்ற தலைப்பில் ஓர் நீண்ட உரை நிகழ்த்தினார். 

முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுனையரசன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கோவில்பட்டி கம்பன் கழக தலைவர் புனித ஓம் லட்சுமணப்பெருமாள் ஆலோசனைப்படி பொருளாளர் வினோத் கண்ணன், இணைச் செயலாளர் மதிவண்ணன் மற்றும் புரவலர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *