• May 13, 2024

கோவில்பட்டி வாலிபரிடம் மதம் மாறினால் ரூ. 10 கோடி  தருவதாக கூறி ரூ.5 லட்சம்  மோசடி செய்தவர் கைது 

 கோவில்பட்டி வாலிபரிடம் மதம் மாறினால் ரூ. 10 கோடி  தருவதாக கூறி ரூ.5 லட்சம்  மோசடி செய்தவர் கைது 

 கோவில்பட்டியைச் சேர்ந்தவாலிபர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற ஐ. டி. யில் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ. 10 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

மேலும் அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார். அதனை நம்பி மேற்படி வாலிபர், அந்த நபருக்கு எதிரிக்கு ரூ.4,88,159/- பணத்தை ஜி.பே.மூலம் அனுப்பியுள்ளார்.

அதற்கு பின்னர் அந்த நபரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி வாலிபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் மேற்படி பாதிக்கபட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று  ராஜவேலின் வீட்டருகே  அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்தனர்.

பின்னர் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *