கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ; நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை 29-ந்தேதி தொடங்கி மே 8 -ந் தேதி வரை நடக்கிறது.
கொடியேற்றம்
29-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது. அன்றைய தினம் 1-வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் சங்கம்.
இரவு 7 மணிக்கு கோவில் கலையரங்கத்தில், “வாரியாரும் வள்ளலாரும் “ என்ற தலைப்பில் முனைவர் சி.தேவி சொற்பொழிவு ஆற்றுகிறார்.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் டி.வி.புகழ் மலர்விழி மற்றும் டி.வி.கலைஞர்கள் வழங்கும் இசை பட்டிமன்றம் நடக்கிறது. தலைப்பு “ அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு ஆண்கள் கதாநாயகனா? காமெடியனா?.
2 ம் நாள்
2-ம் நாள் (30.5.24) மண்டகப்படிதாரர் நாடார் சரக்கு வர்த்தகர்கள், தரகு, தையல் தொழிலாளர்கள். இரவு 7 மணிக்கு கஜலட்சுமி வாகனத்தில் வெள்ளிகுடையின் கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் தாமரையுடன் “திருமகள் வடிவத்தில்” எழுந்தருளி திருவீதி உலா வருதல்.
இரவு 7.25 மணிக்கு கோவில் முன்புறம உள்ள கலையரங்கில் அனுசுயா மனோகரனின் பக்தி சொற்பொழிவு .தலைப்பு: “மாணிக்கவாசகரின் பக்தி நெறி”
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நாகர்கோவில்
-மகிழ்ச்சி கலைகுழுவினரின் பல்சுவை நடன நிகழ்ச்சி நடக்கும்.
3 வது நாள்
3வது நாள்(1.5.24) மண்டகப்படிதாரர் நாடார் ஜவுளி, ரெடிமேட் கடை உரிமையாளர்கள், தையல் கலைஞர்கள் . இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல்.
இரவு 7.25 மணிக்கு கோவில் எதிர்புறம் உள்ள கலையரங்கில் பட்டிமன்ற பேச்சாளர் பாமணி, “மகான்கள் காட்டிய பாதை “ என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு ஆற்றுகிறார்.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் கலையரசி காந்திராஜ் குழுவினரின் திரைப்பட மெல்லிசை நடைபெறும்.
4 -வது நாள்(2-5.24) மண்டகப்படிதாரர்
நாடார் வெற்றிலை பாக்கு சில்லறை பலசரக்கு வியாபாரிகள்- இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்தில் அன்னை மீனாட்சி அற்புத கோலத்தில் அம்மன் வீதி உலா,
இரவு 7.25 மணிக்கு கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, தலைப்பு :ஆன்மீக சிந்தனைகள், உரையாற்றுபவர் : தமிழ்ச்சோலை கா கா.காளியப்பன்.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நாகர்கோவில் கே மணவாளனின்’ ராகசுரபி’ திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.
5 வது நாள்
5-வது நாள் மண்டக படிதாரர்- நாடார் கசாய் வர்த்தகதாரர்கள்- இரவு 7 மணிக்கு அலங்கார ஊர்தியில் காளை வாகனத்தில் ‘கண்ணன் இவன் தானோ’ என்று எண்ணத்தோன்றும் விதத்தில் அம்மன் வீதி உலா.
இரவு 7:30 மணிக்கு கோவில் கலையரங்கில் ‘பக்தியால் மேம்படுவோம்’ என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு.உரையாற்றுபவர்- பாடலாசிரியர் ரம்யா முத்து பாபு.
இரவு 8 மணிக்கு அடைக்கலம்காத்தான் மண்டபத்தில் மார்த்தாண்டம் கே எஸ் குமார் வழங்கும் அபிநயா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி.
6 வது நாள்
6-வது நாள் மண்டல படிதாரர் நாடார் லாரி,பஸ்,மினி பஸ்,ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள்,புரோக்கர்கள்,டிரைவர்கள், மெக்கானிக்குகள்.இரவு 7 மணிக்கு ஐராவதம் வாகனத்தில் கொற்றவை கோலத்தில் அம்மன் எழுந்தருவிவீதி உலா.
இரவு 7.25 மணிக்கு கோவில் கலையரங்கில் ஸ்ரீ பாலா நாட்டிய பள்ளி வழங்கும் பரதநாட்டிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் திரைப்பட நடிகர் அம்ஜோ வழங்கும் ராகாஷ் இசைக்குழு நடத்தும் இன்னிசை நிகழ்ச்சி.
7 வது நாள்
7-ம் நாள் மண்டகப்படிதாரர் – நாடார் வர்த்தக குமாஸ்தாக்கள்,இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் மீது உலா.
இரவு 7. 25 மணிக்கு கோவில் மண்டபத்தில் மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு. உரையாற்றுபவர்-எல் சுப்பிரமணியன்.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நாகர்கோவில் விஜய் வழங்கும் கேரளா புகழ் குட்லக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி.
8 வது நாள்
8 ம் நாள் மண்டகப்படிதாரர் நாடார் மொத்த வியாபாரிகள்- இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் ஆதிபராசக்தி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
இரவு 7.25 மணிக்கு கோவில் கலையரங்கில் சர்வம் சக்தி மயம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு. உரையாற்றுபவர் சித்ரா கணபதி.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் இசை அமைப்பாளர் ரியாஸ் காதிரியின் இன்னிசை நிகழ்ச்சி.
9 வது நாள்
9 வது நாள் மண்டக படிதாரர் – கோவில்பட்டி இந்து நாடார் தீப்பெட்டி, குச்சி மற்றும் மூலப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டமைப்பு.
காலை 9 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல். 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை.மாலை 5 மணிக்கு பெண் பக்தர்கள் கைகளில் மாவிளக்கு ஏந்தி நகர்வலம். மாலை 5.30மணிவேண்டுதல் பூச்சட்டிகள்,21 அக்னி சட்டி,54 அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வருதல்.
இரவு 7 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா.
இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் ஜெகன் வழங்கும் ஜெ. ஆர். எஸ். குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி.
பொங்கல் விழா
திருவிழாவின் 10 வது நாள் நிகழ்ச்சியாக பொங்கல் விழா நடக்கிறது.அதிகாலையில் தெற்கு நந்தவனம் சென்று புனித நீர் எடுத்து வந்து கோவில் முன்பு பொங்கல் இடுதல்.
மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா. மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் திருப்பல்லக்கில் அம்மன் கோவிலை சுற்றி வருதல். பின்னர் மேளதாளத்துடன் முளைப்பாரிகள் நந்தவனம் கொண்டு சேர்த்தல் நடைபெறும்.