• April 27, 2024

100% வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு நடந்த இடங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த தேர்தலில் கோவில்பட்டி பகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளான விநாயக நகர், இபிகாலனி, சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 வட்டாட்சியர்கள் சரவணபெருமாள், தங்கையா.ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *