குலசேகரன்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார்..
இதனை கொண்டாடும் விதமாக இஸ்ரோ சார்பில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து `ரோகினி’ என்ற சிறிய ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது,.
ரோகிணி ராக்கெட்டில் காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத், திருச்செந்தூரில் .கூறியதாவது:-
இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமைந்து உள்ளது. குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம்.
ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என நம்புகிறேன். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் நேரம், பொருளாதாரம் போன்றவை சேமிப்பாகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10-ல் ஒரு பங்கு செலவே ஆகிறது-
இவ்வாறு அவர் கூறினார்,.