• May 20, 2024

பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்வு

 பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்வு

டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மது பானங்களின் மீதான களால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விழ உயர்வு பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிர்பாது.

எனவே 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மில்லி அளவு கொண்ட உயர்ரக மது பானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 650 மில்லி அளவு கொண்ட பீர் வகைகள் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மில்லி, 75௦ மில்லி, 1௦௦௦ மில்லி கொள்ளலவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மில்லி,500 மில்லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும், அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *