40 தொகுதிகளையும் இலக்காக வைத்து நாடாளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. எதிர்கொள்ளும்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்

வடசென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் மவுன ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-,
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் கொண்டாடுவதற்கு முழு தகுதி படைத்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்..மக்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு குறைவது போல் தெரிந்தால் உடனே தமிழ் மொழியை ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டு தமிழ் மொழிக்கு ஆதரவாக செயல்படுவது போல் காட்டிகொள்வது தான் திமுகவின் வேலை.
மக்களுக்கு தேவையான திட்டங்களை தொடங்குகிறோம் என்ற பெயரில் திட்டங்களை தொடங்கி விட்டு அதில் அவர்கள் தான் ஆதாயம் அடைகிறார்களே தவிர மக்கள் ஆதாயம் அடைவதில்லை. ஜல்லிக்கட்டுஅரங்கம் , கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற திட்டங்களை முழுமையாக முடிக்காமல் அவர்களது ஆதாயத்திற்காக அவசரகதியில் தொடங்கி மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளார்கள்.
தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போட்டவரை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்தும், வழக்குப்பதிவு செய்யாமல் பிடித்துக் கொடுத்த எங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தது தான் இந்த தி மு க அரசின் செயல்பாடு. திமுக நிர்வாகிகள் இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தவறு செய்தாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை ஆனால் திமுக அரசுக்கு எதிராக உண்மை கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது மட்டும் கைது நடவடிக்கையை எடுப்பதுதான் திமுக அரசின் துரித நடவடிக்கை..
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடி தண்ணீரில் மலம் கலந்த விவகாரத்தில் 100 நாட்களைக் கடந்தும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தலித் விரோத, மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது..
சாதி மதம் இனம் இல்லாமல் உலகப் பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது ஏற்புடையது அல்ல நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மாநில நலன்களையும் மக்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தியும் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் இலக்காக வைத்து நாடாளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. எதிர்கொள்ளும்.
இவ்வாறு டி,.ஜெயக்குமார் கூறினர்.
