• June 9, 2025

கோவில்பட்டியில் குடியரசு தின கொடியேற்றம்- ரத்ததான முகாம்

 கோவில்பட்டியில் குடியரசு தின கொடியேற்றம்- ரத்ததான முகாம்

இந்தியாவின் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா க்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன.

கோவில்பட்டி கோட்ட அஞ்சலக அலுவலகத்தில் இன்று காலை நடந்த குடியரசு தினவிழாவில்  கண்காணிப்பாளார் சுரேஷ்  தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நாடார் மேல்நிலைப்பள்ளி

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகரசபை துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் அருணாசலம் நன்றி கூறினார்.

விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஜோதிபாசு, சிறப்பு அழைப்பாளர்கள் இளங்கோ, சவுந்திரபாண்டியன், செல்வம், வைத்தியலிங்கம், வெங்கடேஷ், பழனி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர், சேவை அமைப்பு மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் மாணவ, மாணவிகளின் மாறுவேடப்போட்டியும் நடைபெற்றது,

ரத்ததான முகாம்

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆசியாபார்ம்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் குடியரசு தின ரத்ததான முகாம் ஆசியாபார்ம்ஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. டாக்டர் வெங்கடேஷ் தலைமையில் டாக்டர்கள்  நிரஞ்சனி, அபிநயா மற்றும் செவிலியர்கள் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆசியாபார்ம்ஸ் நிறுவன பணியாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர்.

ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார். டாக்டர்  வெங்கடேஷ் , ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம்,முத்து முருகன்,ராஜ்குமார் பூல்பாண்டி,ராஜமாணிக்கம்,வழக்கறிஞர் ஜெயஸ்ரீ, உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம்,முனைவர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *