சிதம்பராபுரத்தில் கிராமசபை கூட்டம்; சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,சிதம்பராபுரம் கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிராமசபை கூட்டம் நடந்தது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
சிதம்பராபுரம் ஊராட்சியில் மரங்கள் வளர்த்திடவும், சீமை கருவேல மரங்களை அகற்றிடவும் கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஜெயந்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் மதிச்செல்வி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

