• June 9, 2025

இலங்கையில் இருந்து பவதாரணி உடல் சென்னை வந்தது; திரை உலகினர் இறுதி அஞ்சலி

 இலங்கையில் இருந்து பவதாரணி உடல் சென்னை வந்தது; திரை உலகினர் இறுதி அஞ்சலி

இசை அமைப்பாளர் இளையாராஜாவின் மகள் பவதாரணி. 47 வயதான இவர் பின்னணி பாடகி மற்றும் இசை அமைப்பாளர் ஆவார்.

கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதமாக இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பவதாரணி உடல்நிலையில் நேற்று திடீர் என பின்னடைவு ஏற்பட்டு இறந்து போனார்.அப்போது இளையராஜா இலங்கையில் தான் இருந்தார்,.

மகள் இறந்த செய்தி அவரை துயரத்தில் ஆழ்த்தியது. கொழும்பு மருத்துவமனைக்கு  பவதாரணி உடல் கொண்டுசெல்லப்பட்டு   உடற்கூராய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு , பொதுமக்கள் அஞ்சலி செலுத்த பார்வைக்கு வைக்கப்பட்டது.

திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பவதாரணி உடல் இன்று இரவில் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று இளையராஜா குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *