சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக தேர்வு: ஆட்சியர் லட்சுமிபதிக்கு கவர்னர் விருது

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024ல் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முன்னெடுப்புகளை மேற் கொண்டமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் “சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக ஆட்சியர் லட்சுமிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கான விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாடு கவர்னர் ஆர்என் ரவி வழங்கினார். ஆட்சியர் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அந்த விருதினை பெற்றுக்கொண்டார்
