• June 9, 2025

குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த 2 பேர் கைது

 குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த 2 பேர் கைது

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்  அடிப்படையில் இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் தலைவாசல் பகுதியில் ஒரு வீட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த வீட்டில் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட மணிவண்ணன் மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ஸ்கேன் கருவி, மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது




Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *