கோவில் வருடாபிஷேக விழாவில் அன்னதானம்

கோவில்பட்டி தெட்சிணா விநாயகர் கோவிலில் 61வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மகாவிஷ்ணு ஹோமம், சுதர்சன ஹோமம், அனுக்கிரக ஹோமம் நடந்தது. பின்னர் காலை 6.30 மணிக்கு தீர்த்த குடங்கள் எடுத்து கோயிலை வலம் வந்து, கோபுர விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவர் தெட்சிணா மூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
.அன்னதானத்தை திமுக பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தொடங்கி வைத்தார். விழாவில், கோவில் தலைவர் மாரிமுத்து, செயலாளர் சிவகணேஷ்குமார், பொருளாளர் பெருமாள், வழக்கறிஞர் கணேஷ்சுப்பிரமணியன்,பாஜக நகரத் தலைவர் காளிதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
