• June 9, 2025

வைகாசி விசாகம் ; முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

 வைகாசி விசாகம் ; முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் திரண்டிருந்த காட்சி,

தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த தினம் தான் “வைகாசி விசாகம்” திருநாள். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்களை உள்ளடக்கியது. தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 9) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும்.. இக்கோயிலில், இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர், முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் மாலையில் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், விசாகத் திருவிழாவை ஒட்டி (இன்று) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன./ ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர், சுப்பிரமணிய சுவாமி,செல்லியாரம்மன் கோவிலில் வைகாசி விசாகம் விழா இன்று நடைபெற்றது..

வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு மாப்பொடி,மஞ்சள் பொடி,பால் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரம்,தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

C                                                

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *