• June 9, 2025

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரி  மாணவ, மாணவியர் 6 பேருக்கு “இளம் அக்னி சிறகுகள் விருது”

 கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரி  மாணவ, மாணவியர் 6 பேருக்கு “இளம் அக்னி சிறகுகள் விருது”

தமிழ் நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் இராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து , “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதைப் போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தியது.

இம் மாநில அளவிலான போட்டிக்கு தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதியதில் 69 சிறுகதைகள்  தேர்வாகி அதனை சிறந்த புத்தகமாகப் பதித்து  2025 ஜூன் 7ம் தேதி திருச்சி  கலையரங்கில் வெளியிடப்பட்டது.

இதில் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 6 பேரின் சிறுகதைகள் தனித்துவம் பெற்று இடம்பெற்றுள்ளன. 6 பேருக்கும் “இளம் அக்னி சிறகுகள் விருது” ஐ.ஐ.டி திட்ட தலைவர்.ஹரி கிருஷ்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் நேரில்  கலந்து கொண்டனர்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *