TNPSC பயிற்சி வகுப்புகள் 2-ந்தேதி முதல் நடைபெறும்; தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட TNPSC பயிற்சி வகுப்புகள் மற்றும் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
தற்போது நிலைமை சீரடைந்ததால் தன்னார்வ பயிலும் வட்ட TNPSC பயிற்சி வகுப்புகள் 2.1.2024 முதல் நடைபெறும். தன்னார்வ பயிலும் வட்ட நூலகமும் 2.1.24 முதல் செயல்பட தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தன்னார்வ பயிலும் வட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் இத்தகவலை நமது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.