கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைக்க தீர்மானம்
கோவில்பட்டி நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ..
இக்கூட்டத்தில் இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி , இலுப்பையூரணி, திட்டங்குளம் , பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, நாலாட்டின் புதூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இந்த தீர்மானம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும். அதை தொடர்ந்து நிர்வாக பணிகள் தொடரும்.