• May 9, 2024

கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைக்க தீர்மானம்

 கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைக்க தீர்மானம்

நகராட்சி கூட்டத்தில் தலைவர் கருணாநிதி பேசிய போது எடுத்த படம்

கோவில்பட்டி நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.  ..

இக்கூட்டத்தில் இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி , இலுப்பையூரணி, திட்டங்குளம் , பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, நாலாட்டின் புதூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இந்த தீர்மானம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும். அதை தொடர்ந்து நிர்வாக பணிகள் தொடரும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *