• May 9, 2024

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

 தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் தலைமையில் இன்று “தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர்  அந்தோணியம்மாள் உள்ளிட்ட  காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள்  குமார்,  ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *