தேர்தலுக்கு முன் அல்வா, தேர்தலுக்கு பின்னர் ரசகுல்லா; தி.மு.க.பற்றி முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை ராயபுரத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் இடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு குறைந்த அளவிலான பெண்களுக்கு மட்டும் 1,௦௦௦ ரூபாய் அளித்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றி விட்டனர். ஏழை எளிய மக்களுக்கு கொடுக்காமல் வசதி படைத்தவர்களுக்கும், தி.மு.க.வினருக்கு மட்டுமே உதவித்தொகை சென்று சேர்ந்து இருக்கிறது.
தாலிக்கு தங்கம் திட்டம் முதல், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் வரை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது.
தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு அரசு பணி வழங்குவோம் என சொல்லிவிட்டு, தற்போது 29 மாதங்கள் ஆகியும் இதுவரை 15000 த்துக்கும் குறைவானவர்களுக்கே அரசு பணி வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன் அல்வா கொடுப்பதும், தேர்தலுக்குப் பின்னர் ரசகுல்லா கொடுப்பதும் தான் தி.மு.க.வின் வேலை
புதிய அரசு பணிகள் எதையும் தி.மு.க. அரசு உருவாக்கவில்லை., டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனம் விவகாரத்தில் மாபெரும் குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. முன்னாள் டி.ஜி.பி.க்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்கினால் ஜால்ரா போடுபவர்களுக்கு எல்லாம் பின்னாளில் அரசு பணி கிடைக்கும் என்று நம்பிக்கை வந்து விடும்
ஆளுநர் அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் உளவுத்துறை தோல்வியை காட்டுகிறது.
