தற்காப்பு கலை போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நகரசபை தலைவர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியும், புனித மரியன்னை பள்ளியில் சிலம்பம், குத்துசண்டை போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் வயது வாரியாக நடைபெற்றது..
இதில் இலுப்பையூரணி ஏஞ்சல் நர்சரி பள்ளி மாறும் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அவர்களை பாராட்டிய நகராட்சி தலைவர் மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஜோதிபாசு, தற்காப்பு கலை பயிற்சி பள்ளி நிறுவனர் காசி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.