தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆற்றின் குறுக்கே புதிதாக சிறு பாலங்கள்; ஆட்சியர் பார்வையிட்டார்
தூத்துக்குடி வட்டம் வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி மற்றும் காலாங்கரை ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்தின் மூலம் கோரம்பள்ளம் ஆற்றில் (உப்பாத்து ஓடை) ரூ.5 கோடி செலவில் சிறுபாலங்கள், வெள்ளப் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் உள்வாங்கிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், வீரநாயக்கன்தட்டு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலங்களை.மாவட்ட ஆட்சியர் .கி.செந்தில்ராஜ், இன்று (26.8.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, செயற்பொறியாளர் (கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவிப்பொறியாளர் .ரத்தினகுமார் தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.