• May 9, 2024

கோவில்பட்டி : கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

 கோவில்பட்டி : கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவில்பட்டி காந்தி மண்டப புத்தக கண்காட்சியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வண்ணம் தீட்டுதல்,பரதநாட்டியம், சங்க இலக்கிய பாடல்கள், உள்ளிட்ட கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார்.பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், சாகித்யஅகாடமி விருது பெற்ற சூழ் நாவலாசிரியர் சோ.தருமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நூலக ஆய்வாளர் பூல்பாண்டி,ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன்,தமிழாசிரியை முருக சரஸ்வதி,ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி,புத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ராஜபாண்டி,சீனிவாசன்,சண்முகம்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில்புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *