• May 20, 2024

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

 கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார்பில் -கோவில்பட்டி கல்வி மாவட்ட த்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் என்.ஜோதி 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் , எஸ்.சுபாஸ்ரீ 592 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் , ஆர்.தானு ஸ்ரீ , எஸ்.லத்திகா 590 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பிடித்து சாதனை படைத்த மாணவிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டல தலைவா் ஆர்.பொன்ராஜ் , இனாம்மணியாச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் , மண்டல சங்கத்தின் உப தலைவருமான ஆர்.செல்வராஜ் , பொருளாளா் பி .கோபாலகிருஷ்ணன் , மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன்மோகன் , மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் , செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன் , விஜயராஜ் ஆகியோா் இனிப்பு வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்து மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *