கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஆணையாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய 50-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற தலைவர் கருணாநிதி பேசுகையில். “எல்லா உறுப்பினர்களிடமும் அவர்வர் பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அறிந்து விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார்.