• May 20, 2024

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நீதி விசாரணை நடத்தக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

 மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நீதி விசாரணை நடத்தக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தக்கோரி அம்பேத்கர், பெரியார் மார்க்சிய உணவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
தாலுகா அலுவலகம் எதிரே இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் (சி,பி.ஐ.- எம்.எல்.) தலைமை தாங்கினார். தமிழ்புலிகள் கட்சி மாவட்ட இலம்புலிகள் அணி செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார்.
தமிழ்புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் வில்லிசெரி முருகேசன், ஒன்றிய நிதி செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மேலும் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.
*நீட நுழைவு தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்.

  • சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும்,
    *நெடுஞ்சாலை சுங்கசாவடிகளை மத்திய அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    மேற்கண்டவை உள்பட மேலும் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *