கோவில்பட்டியில் சதுரங்க போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடைபெற்றது.
கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது- நகர் மன்ற கவுன்சிலர் ஜோஸ்பின் லூர்துமேரி தொடங்கி வைத்தார்
6-8, 9-10, 11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக அதாவது 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என நடத்தப்பட்ட இந்த போட்டியில் 12 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
14 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள்:
1.திவாகர் -நகராட்சி நடுநிலைப்பள்ளி
2.சத்ரபதி சிவாஜி-வ உ சி பள்ளி
3.சர்வேஷ்-நகராட்சி நடுநிலைப்பள்ளி
பெண்கள்:
1.ஸ்வேதா -அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி
2.சுபலட்சுமி-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
3-விசாகா- அரசு மேல்நிலைப்பள்ளி எட்டையபுரம்
17 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள்:
1.அரவிந்த் ராஜ்- கே ஆர் சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி
2.ரமேஷ்- அரசு மேல்நிலைப்பள்ளி வில்லிசேரி
3.சஞ்சய் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி
பெண்கள்:
1.சர்மிளா ஸ்ரீ- அரசு மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி
2மகாலட்சுமி- நகராட்சி நடுநிலைப்பள்ளி கோவில்பட்டி
3சந்தியா- கே ஆர் சாரதா மேல்நிலைப்பள்ளி
19 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள்:
1.தங்கராஜ்- அரசு மேல்நிலைப்பள்ளி ஊத்துப்பட்டி
2.மதன்- கே.ஆர். சாரதா பள்ளி, நெல்லை
3.மனோஜ் குமார்- கே எஸ் சாரதா மேல்நிலைப்பள்ளி
பெண்கள்:
1.காவியா அரசு மேல்நிலைப்பள்ளி எட்டையாபுரம்
2.கீதமணி அரசு மேல்நிலைப்பள்ளி வில்லிசேரி
- மகா-கே ஆர் சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி
பரிசளிப்பு விழா
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நகர் மன்ற கவுன்சிலர் ஜோஸ்பின் லூர்து மேரி கேடயம் பரிசளித்தார். மேலும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி , உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன், தேசிய மாணவர்
படை அலுவலர் பூப் பாண்டி உள்ளிட்டவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்,
