கோவில்பட்டி ஆயிரத்தெண் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டி கதிரேசன் சாலையில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது,
முதல் இரண்டு நாட்கள் விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து பலவேறு பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வேள்வி பூஜை. கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன.

மூன்றாம் நாள் காலை 5 மணிக்கு மேல் பல்வேறு பூஜைகள் நடைபெற்று காலை 8.15 மணிக்கு கும்ப பிரயாணம் தொடங்கியது.8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் தொடங்கி காலை 9.3௦ மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பகதர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், பா.ஜனதா மாவட்ட தலைவர் சென்னகேசவன் வெங்கடேசன். அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிராஜ், ஆவின் தலைவர் தாமோதரன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்
கும்பாபிஷேகம் முடிந்ததும் கோவில் அருகில் உள்ள ஆர்த்தி மகாலில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
