தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறவேண்டும்; கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கோவில்பட்டி அமைப்பு கூட்டம் மற்றும் கலைஞர்களுக்கான பாராட்டு நிகழச்சி ஆகியவை நடைபெற்றது. சவுபாக்கியா திருமண மணடபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுசெயலாளர் டாக்டர் த,ஆறம், மாவட்ட செயலாளர் பேராசிரியர் ரகு அந்தோணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் பேராசிரியர் சத்தியபாலன், விருதுநகர் மாவட்ட செயலாளார் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலைமாமணி விருது பெற்ற அமலபுஷ்பம், திரைப்பட இயக்குனர் வரதன் செல்லப்பா, பண்பலை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிகண்டன், பாடகரும் இசைக்கலைஞருமான அருள்செல்வம் ஆகியோர் பாராட்டு பெற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறவேண்டும். மாநில அரசுகளின் மீது திணிக்கக்கூடாது.
*நமது பண்பாட்டு சின்னங்களான அனைத்து வழிபாட்டு தலங்களையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பாதுகாத்திட வேண்டும்.
இலக்கிய பேராசான் ப.ஜீவானந்தம் பெயரில் தமிழக அரசு கலை இலக்கிய விருதுகள் வழங்கிடவேண்டும்.
*காந்தியடிகள்-தோழர் ஜீவானந்தம் சந்திப்பு நடந்த சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.
*சுதந்திர போராட்ட தியாகி மதுரகவி பாஸ்கரதாஸ் நினைவாக மதுரையில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.
*கோவில்பட்டியில் மகரிஷி ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
