• June 7, 2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா நிர்வாகிகள் தேர்வு

 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா நிர்வாகிகள் தேர்வு

கோவில்பட்டி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பதக்கங்களுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி பாரதி இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ரங்கராஜன், சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவர்

அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு சான்றிதழ்.

தெய்வேந்திரன், பேராசிரியர் சுரேஷ் பாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

பின்னர் நடந்த பேரவை கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தாலுகா தலைவராக சுடலைமணி, செயலாளராக தினேஷ் குமார்,பொருளாளராக மாரிச்செல்வம் உள்ளிட்ட 12 பேர் கொண்ட புதிய தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் மாவட்ட செயலாளர் சுரேஷ் இசக்கி பாண்டி பேரவையை நிறைவு செய்து பேசினார்.
இந்நிகழ்வில் வாலிபர் சங்க நிர்வாகிகள் ராமர், கண்ணன், கருப்பசாமி, கமல், வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லாயல் மில் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *