• June 7, 2025

கோவில்பட்டி வட்டார அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 210 மாணவ. மாணவிகளுக்கு பாராட்டு

 கோவில்பட்டி வட்டார அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 210 மாணவ. மாணவிகளுக்கு பாராட்டு

கோவில்பட்டி வட்டார அளவில் 2022 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 210
மாணவ. மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி பைரவா மகாலில் நடைபெற்றது. கோவில்பட்டி இலக்கிய உலா, அபிராமி அசோசியேட்
ஜெய்கிறிஸ்ட் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழா அபிராமி முருகன் தலைமை தாங்கினார். புனித ஓம் கல்வி நிறுவனங்கள்
நிறுவனர் லெட்சுமணப் பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் தமிழரசன் ரோட்டரி கிளப் மேனாள் ஆளுநர் விநாயகா ரமேஷ், ஆசியாபார்ம்ஸ் பாபு, ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம், மைக்ரோபாய்ண்ட் ஆர்ம்ஸ்ட்ராங், டாக்டர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,


அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு பட்டயம், பயனுள்ள நூலும், பெற்றோர்களுக்கு பெருமை மிகு பெற்றோர் என்ற அபிராமி பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது. அரசு பொதுத்தேர்வில் சிறப்பான பங்களிப்பு நல்கிய ராவில்லா கே ஆர் ஏ வி மெட்ரிக் மேல்நிலைபள்ளிக்கு பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது
.
நிகழ்ச்சியை முனைவர் முருக சரஸ்வதி தொகுத்து வழங்கினார். ஜெய்கிறிஸ்ட் அறக்கட்டளை சார்பாக வக்கீல் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார் முடிவில் கவிஞர் பார்த்திபன் நன்றி கூறினார். தலைமையாசியர் சிக்கந்தர் பக்கீர், தொழில் அதிபர் முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *