5 நாள் பயணம்: வெங்கையா நாயுடு சென்னை வருகை
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக தமிழகம் வந்து உள்ளார். அவரை சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் வரவேற்றனர்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். வருகிற மே 28-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை சிறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.