• March 6, 2026

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

 மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்ததாக கைதானார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கொலை நடந்தது. இந்த  வழக்கில் போலீசார்  விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. முருகன் நேற்று  (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு  ஆயுள் தண்டனை மற்றும் ரூ 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். சுனில் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர். அன்னராஜ், தற்போதைய காவல் ஆய்வாளர் . கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர். கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *