கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவ கஞ்சி; பொது நல அறக்கட்டளை ஏற்பாடு
கோவில்பட்டி அரசு மருத்துவமனை யில் கடந்த ஒரு வருடமாக ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்ட ளையின் தலைவர் ராஜே ந்திரன் தலைமையில் அதன் உடலுக்கு வலிமை தரும், நோய் தடுப்பு மருத்துவக் கஞ்சி இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இம்மருத்துவ கஞ்சியில் சீரகச்சம்பா அரிசி, பாசிப் பருப்பு, இஞ்சி, பூண்டு, புதினா, மிளகு, சீரகம், வெந்தயம், சுக்கு, திப் பிலி, ஜாதிக்காய், தேங் காய்ப்பால், முந்திரிப்பருப்பு, முருங்கைக்கீரை, உள்ளிட்ட 27 மருத்துவ குணம் கொண்ட பொருட் களைக் கொண்டு பயணாளர்கள் எதையும் ஒதுக்காத வகையில் அதனை அரைத்து சுகாதாரமான முறையில் தரமான மருத் துவ கஞ்சிதயார் செய்து வழங்கி வருகிறார்கள்.’

தினமும் மருத்துவ மனைக்கு வருகை புரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், பொது மக்களுக்கும், அள வில்லாமல் காலை 8 மணி முதல் தினமும் தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இதனை குடித்துவரும்பயனாளிகள் அறக்கட் டளை நிர்வா கிகளை பாராட்டி, வா ழ்த்தி, வரு வது மட்டுமின்றி இதனை விரிவு படுத்தி காலையில் முக்கிய சாலைகளில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுநல ஆர்வலர்கள் இதன் தயாரிப்பு முறைக ளையும் இதற்கானசெலவி னங்களையும் நேரில் கேட்டறிந்து செல்கிறார்கள்.







