• June 8, 2025

காலாங்கரைபட்டியில் இலவச மருத்துவ முகாம்

 காலாங்கரைபட்டியில் இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியை அடுத்த காலாங்கரைபட்டி சமுதாய நலக் கூடத்தில் இலவச மருத்துவமுகாம் நடந்தது. ஊர் நாட்டாமை சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார்.. முன்னாள் பஞ்சாய்த்து தலைவர் கனகலட்சுமி லட்சுமணபெருமாள் முன்னிலை வைத்தார்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர். ஊராட்சி செயலர் முருகலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

மருத்துவ முகாமில் டாக்டர்  சரவணவிஜய் மற்றும் செவிலியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதேவி, தனலட்சுமி  ஆகியோர் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல் தலைவலி காது மூக்கு தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

பெல்ஸ்டார் நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல தலைமை அலுவலர் பாக்கியராஜ், கோவில்பட்டி மண்டல மேலாளர் முத்துமாலை, கழுகுமலை கிளை மேலாளர் பிரேசில் மார்க்ரேட், தென்காசி திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், ஒட்டப்பிடாரம் வட்டார பயிற்றுநர் சுதா,  மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *