• June 8, 2025

வேலை உறுதி திட்டத்தில் 2 மாதமாக சம்பளம் இல்லை: கோவில்பட்டியில் 4 கிராம பெண்கள் போராட்டம்

 வேலை உறுதி திட்டத்தில் 2 மாதமாக சம்பளம் இல்லை: கோவில்பட்டியில் 4 கிராம பெண்கள் போராட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழவிபட்டி ஊராட்சியில் கிழவிபட்டி, கெச்சிலாபுரம், செண்பகபேரி, துரைச்சாமிபுரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில்  மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம்  வழங்கப்படவில்லை.

பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பளம்  வழங்கப்படாததால், நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் , விவசாய தொழிலாளர் சங்க கிளை செயலாளர் சித்ரா, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணி, கிருஷ்ணவேணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்னத்தம்பி, விஜயராஜ், கணேசன் மற்றும் வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *