கோவில்பட்டி முகாமில் 26 பேர் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு

கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 -ம்ஆண்டு பழைய மாணவர் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அன்று இலவ ச கண்சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள்.
மார்ச் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாணவர் சங்க தலைவர் ஜி.,ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் என்..ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், ராஜேந்திரன், கே.மணிக்கொடி, கே.கே.பாலசுப்ரமணியன், திருச்சிற்றம்பலம், என்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் 138 பேருக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டதில் 26 கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யபப்ட்டு அரவிந்த் கண் மருதுவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது..
