கோவில்பட்டியில் தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கோவில்பட்டி ரெயில்நிலையம் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது,
நிகழ்ச்சிக்கு மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைசெயலாளர் சுபபிரியா தண்ணீர்ப்பந்தல் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள்,நீர் மோர் வழங்கினார்.
நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், மலைராஜ், ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி, கயத்தார் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுப்புராஜ், துணைச் செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பொறியாளர் அணி துணைச் செயலாளர் கிரிதான், நகர நிர்வாகிகள் மதிமுத்து, கணேச மூர்த்தி, ராஜ், முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலையில் கோவில்பட்டி நகர தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கிராமம் சக்திவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை நகர துணைச்செயலாளர் கணேசமூர்த்தி செய்திருந்தார். நிர்வாகிகள் மதி முத்து,கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
