• June 7, 2025

கி.ரா நினைவரங்கில் நூல் வெளியீடு மற்றும் ஆய்வு கூட்டம்

 கி.ரா நினைவரங்கில் நூல் வெளியீடு மற்றும் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் பொன்விழா கொண்டாட்டத்தின் எட்டாம் நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா மற்றும் நூல் ஆய்வு குறித்து கூட்டம் கி.ரா நினைவரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார்..கிளைச் செயலாளர் வேலுச்சாமி வரவேற்புரையாற்றினார். சாகித்திய பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் தொடக்க உரையாற்றினார்.

இளம் எழுத்தாளர் சால்வடார் எழுதியுள்ள “கடவுளை கொலை செய்தவன்” எனும் நூலை கவிஞர் ஜெகநாதன் வெளியிட  தமுஎகச கிளை தலைவர் அபிராமி முருகன் பெற்றுக்கொண்டார். இந்த நூல் குறித்து ரம்யா, வாலிபர் சங்க நிர்வாகிகள்  தினேஷ் குமார் மற்றும் இசக்கி ஆகியோர் பேசினர். நூலாசிரியர் சால்வடார் மாதவன் ஏற்புரை வழங்கினார்.

அதேபோல், எழுத்தாளர் அருள் மொழியின் டைரி நூல் குறித்து கவிஞர் ஜெகநாதன்,  எழுத்தாளர் முருகேஸ்வரி, ஆசிரியர் ஸ்ரீதரன், கருப்பசாமி ,ஜெயக்குமார், முத்துராஜ் ,பிரான்சிஸ், ஸ்ரீ தேவி மற்றும் மைக்கேல் ஜேம்ஸ் ஆகியோர் பேசினர். முடிவில்  கவிஞர் மகாலட்சுமி விளக்க உரையாற்றினார். கிளை பொருளாளர் வழக்கறிஞர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *