• June 7, 2025

மக்கள் நலம் அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது

 மக்கள் நலம் அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது

கோவில்பட்டி மக்கள் நலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு நாள் விழா, மற்றும் மக்கள் சேவகர்களுக்கான பாராட்டு விழா கோவில்பட்டி ஜி.கே.எஸ்..மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ் குமார், பொருளாளர் முகமது ராபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி .கற்குவேல் ராஜன் வரவேற்று பேசினார்.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவை நெஞ்சில் குமார், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சமூக சேவகர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்கள் நலம் அறக்கட்டளையின் குடும்ப உறுப்பினர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். விழா நிறைவில் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *