• June 8, 2025

சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விருதுபெற்ற 2 பேராசிரியர்களுக்கு கோவில்பட்டியில் பாராட்டு கூட்டம்

 சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விருதுபெற்ற 2 பேராசிரியர்களுக்கு கோவில்பட்டியில் பாராட்டு கூட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின்  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கான 2023 24 ஆண்டிற்கான  சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விருது வழங்கும் விழா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன் முன்னாள் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் உள்பட பலர்  கலந்து கொண்டார்கள்

இந்த விழாவில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைத்  தலைவரும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான முனைவர் ஏ பொன்மொழி, பசுவந்தனை நாகம்பட்டி மனோ கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் பவானி ஆகியோர்  இந்த ஆண்டுக்கான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருது பெற்றனர்.

இதையொட்டி இவர்களுக்கு கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அலுவலகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள் ஆல்ட்ரின் அதிசயராஜ், ர் ராம்குமார், குமரேச சீனிவாசன், பால் மகேஷ், குரு சித்திர சண்முக பாரதி உள்பட பலர் கலந்து கொண்டு  பாராட்டினர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *