பாத வெடிப்பை சரிசெய்வது எப்படி?

கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்வது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம் …
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், உங்களின் பாதங்களில் உள்ள வெடிப்பு நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பாத பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
இரவில் உறங்குவதற்கு முன், ஆலிவ் ஆயிலை பாதங்களில் தடவி மசாஜ் செய்து வர மூன்றே நாட்களில் மாற்றத்தை காணலாம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.
வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருகேற்ற உதவும்
கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து பாதங்கள் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.
தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து, அதனை பாதத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்து கழுவினால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்
.வினிகரில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு பாதத்தை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் போல செய்து, அதனை வறட்சியடைந்த பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால் பாதங்கள் மென்மையாக வெடிப்பின்றி இருக்கும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து பளபளப்பாக இருக்கும்.
