• June 8, 2025

விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்-அமைச்சர் உத்தரவு

 விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்-அமைச்சர் உத்தரவு

2024-25ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீட்டர்  நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூ 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படுகிறது.

,தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஆறுமுக மங்களம் சாலையில் 3 கோடியே 36 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.கட்டப்படுகிறது,

இன்னொரு பாலம் விளாத்திகுளம் வட்டத்தில் டி.புதுபட்டி சின்னையபுரம் சாலையில் 3 கோடியே 97 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படுகிறது,
இந்தப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *